மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி: கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலி

தலைநகர் தில்லியில் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 6:42 am

DIN

தலைநகர் தில்லியில் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் அழைப்பு வந்தது. கோட்லா விஹார் பிஎச் -2 இல் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 13 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடியுள்ளான்.

அச்சிறுவன் பந்தை எடுக்கச் சென்றபோது, ​​மைதானத்தின் மூலையில் அமைந்திருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாக அச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அந்த சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.