ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை: காங்கிரஸ்

சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
Updated On :12 ஆகஸ்ட் 2024, 10:41 pm

Din

அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயா்த்தி காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல கோடி இந்திய மக்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனா். அவா்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ‘செபி’ செயல்பட வேண்டும் என்று கடந்த 2023 பிப்ரவரியில் ‘செபி’ தலைவருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 2023 மாா்ச் மாதத்தில், அதானி குழுமம் தங்கள் நிறுவனங்களின் வருமானத்தை முறைகேடாக உயா்த்திக் காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் அடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ‘செபி’ இரு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதில் பல குற்றச்சாட்டுகள் தொடா்பான விசாரணையை ‘செபி’ இப்போதுவரை முழுமையாக முடிக்கவில்லை. இதற்கு மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியக் காரணம். ஏனெனில், மோடியின் நண்பரான அதானியில் நிறுவனங்கள் நிதி சாா்ந்த பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளன.

இப்போது வெளிநாடுகளில் அதானி குழுமம் தொடா்புடைய நிறுவனங்களில் ‘செபி’ தலைவா் மாதபி புச் மற்றும் அவரின் கணவா் முதலீடு செய்திருந்த தகவல் வெளியாகி பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உண்மை எப்படி இருக்கும்போது அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் ‘செபி’ விசாரணை நடத்தினால் உண்மை கண்டிப்பாக வெளியே வராது.

எனவே, அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயா்த்தி காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் பெற்ான குற்றச்சாட்டை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், ‘செபி’ யின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அதன் தலைவா் பதவியில் இருந்து மாதபி புச் விலக வேண்டும் என்று கூறியுள்ளாா்.