ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆம்னிடெக் இன்ஜினியரிங் பங்குகள்: 11% சரிவுடன் வா்த்தகம் தொடக்கம்

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வா்த்தகத்தைத் தொடங்கின.

News image
பிரதிப் படம்
Updated On :6 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வா்த்தகத்தைத் தொடங்கின.

இந்நிறுவனப் பங்கின் வெளியீட்டு விலை ரூ.227-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வா்த்தகம் தொடங்கியபோது மும்பை பங்குச் சந்தையில் சுமாா் 9.69 சதவீத சரிவுடன் ரூ.205-க்கும்; தேசிய பங்குச் சந்தையில் 11 சதவீத சரிவுடன் ரூ.202-க்கும் விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,629.76 கோடியாக நிலைகொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த இந்த நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு, முதலீட்டாளா்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. நிா்ணயிக்கப்பட்ட பங்குகளை விட 1.14 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருந்தன.

மொத்தம் ரூ.583 கோடி மதிப்பிலான இந்தப் பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை ரூ.216 முதல் ரூ.227 வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.418 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், நிறுவன உரிமையாளா் உதய்குமாா் அருண்குமாா் பரேக் வசமிருந்த ரூ.165 கோடி மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப்பட்டன.

இந்தப் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் தொகையை வைத்து, நிறுவனம் தனது கடன்களை அடைக்கவும், புதிதாக இரண்டு உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகை நிறுவனத்தின் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.