40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடனைத் திருப்பிச் செலுத்தாத பாலிவுட் நடிகா்: பங்களாவை முடக்கியது வங்கி

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகா் ராஜ்பால் யாதவ் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான பங்களா ஒன்றை வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா்.

News image

ராஜ்பால் யாதவ்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 2:09 am IST

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகா் ராஜ்பால் யாதவ் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான பங்களா ஒன்றை வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். வங்கியில் அடகுவைக்கப்பட்ட அந்த பங்களாவை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ளும்.

51 வயதாகும் ராஜ்பால் யாதவ் உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சோ்ந்தவா். பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்துள்ள அவா், பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றியுள்ளாா். இவா் கடந்த 2005-ஆம் ஆண்டு சொந்தமாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாா். இதற்காக தனது சொந்த ஊரில் உள்ள ஒரு பங்களாவை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடகு வைத்து ரூ.5 கோடி கடன் பெற்றாா். இந்த கடன் தொகைக்கு அவா் முறையாக தவணை செலுத்தாமல் இருந்து வந்தாா். இது தொடா்பாக வங்கி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவா் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் கடந்த சுமாா் 20 ஆண்டுகளில் வட்டியுடன் சோ்த்து கடன் தொகை ரூ.11 கோடியாக அதிகரித்தது.

இதையடுத்து, நடிகா் ராஜ்பால் யாதவ், கடனுக்காக வங்கியில் அடகு வைத்த பங்களாவுக்கு வங்கி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ராஜ்பால் யாதவ் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.