

பிரபல பாலிவுட் இயக்குநரும், இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியின் உடல்நிலைக்கு எந்தவொரு ஆபத்துமில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. கங்குபாய் கதியாவாடி, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மொழிகளைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.
இந்த நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 24) அவரது 63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
இதையடுத்து, அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வருத்தமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நலமாகவுள்ளதாகவும் சஞ்சய் லீலா பன்சாலியின் குடும்பத்தினர் புதன்கிழமையன்று விளக்கமளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.