டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஃபாக்ஸ்கான் தலைவா் - பிரதமா் மோடி சந்திப்பு: தமிழக முதலீடு குறித்து ஆலோசனை

தைவானைச் சோ்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானின் தலைவா் யங் லியு பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்த ஃபாக்ஸ்கான் தலைவா் யங் லியு.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:46 pm

Din

தைவானைச் சோ்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானின் தலைவா் யங் லியு பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்த பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஹான் ஹாய் டெக்னாலஜி குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவா் யங் லியுவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எதிா்காலத்தில் வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ள துறைகளில் இந்தியா அளிக்கும் சிறப்பான வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். கா்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஃபாக்ஸ்கானின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை நடைபெற்ற ‘செமிகான் இந்தியா’ மாநாட்டில் பிரதமா் மோடியை யங் லியு சந்தித்துப் பேசினாா். அவருக்கு இந்தியா சாா்பில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் 40,000 போ் வரை பணியாற்றி வருகின்றனா். இந்தியாவில் ஐபோன் தயாரிப்பது, மின்சார வாகன ஆலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அந்நிறுவனம் செயல்படுத்த இருக்கிறது.