எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கனிமவள உரிமத் தொகையை மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

கனிமவள உரிமத் தொகையை மாநில அரசுகள் வசூலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

News image
 உச்ச நீதிமன்றம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 6:09 am

DIN

புது தில்லி: கனிமவள உரிமத் தொகையை மத்திய அரசிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

2005 முதல் மத்திய அரசு, குத்தகைதாரர்கள் வசூலித்த தொகையை மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பும், ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கினார்.

அடுத்த 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனிமவள நிலம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே, கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உரிமத் தொகை வசூலித்துக்கொள்ள இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.