நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அஸ்ஸாம்: 19 இடங்களில் வெடிகுண்டுகள்?

தடை செய்யப்பட்ட அமைப்பு எச்சரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 3:55 pm IST

அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தடை செய்யப்பட்ட அமைப்பு கூறியுள்ளது.

அஸ்ஸாமில் வெவ்வேறு இடங்களில் 19 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக, தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அஸ்ஸாம் (உல்ஃபா) தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகக் கூறும் 19 இடங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது. அவற்றில், குவஹாட்டியில் மட்டும் டிஸ்பூர் லாஸ்ட் கேட்டில் உள்பட 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

கூடுதல் தகவல்களாக, உல்ஃபா மற்றும் நாகாலாந்தின் என்எஸ்சிஎன் - யுங் ஆங் பிரிவு ஆகிய இரண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் முழு வேலை நிறுத்தத்திற்காக அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் மக்களை வலியுறுத்தினர்.

வடகிழக்கில் உள்ள இந்த இரண்டு தீவிரவாதக் குழுக்களும், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.