6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: புறநோயாளிகள் பிரிவில் மக்கள் அவதி!

மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிரிவில் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

News image
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:38 am

DIN

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் மேற்கொண்டிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, புறநோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், புறநோயாளிகள் பிரிவில் மக்கள் வெகு நேரம் காத்திருக்கும் நிலையும் காணப்படுகிறது.

மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர, மற்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தின் காரணமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் சில மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மருத்துவ கல்லூரி மாணவியின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும், மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு இரவு நேர பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், அதோடு இந்திய முழுவதும் உள்ள பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனைச் சட்டத்தை உடனடியாக கொண்டுவரவேண்டும். அதேபோன்று மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றி மருத்துவமனையை பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.