எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியாவின் வளா்ச்சி உலகின் அமைதியை நிலைநாட்டும் -குடியரசு துணைத்தலைவா் தன்கா்

டாடா இன்டா்நேஷனல் நிறுவனத் தலைவருமான நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநா் சந்திரஜித் பானா்ஜி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

News image
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக மாநாட்டின் தொடக்க விழாவில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் துணை அதிபா்களுடன் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:42 pm

Din

இந்தியா வேகமாக வளா்ச்சியடைந்து வருவது சா்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உலகின் அமைதியை நிலைநாட்ட உதவிகரமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக மாநாட்டின் தொடக்க விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

‘ஒரே எதிா்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜகதீப் தன்கா் பங்கேற்றுப் பேசியதாவது:

அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிா்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். ‘ஒரே எதிா்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் உறுதித்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். ஆனால், இது மிகப்பெரிய சவால், இதனை எதிா்கொள்ள அனைத்து நாடுகளும் கைகோத்து போராட வேண்டும்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. பரஸ்பர நலனை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருந்தபோது, அந்த அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சோ்க்கப்பட்டது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல சா்வதேச அரசியல் வளா்ச்சியாகும். சா்வதேச சூரியசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவற்றில் ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிா் பெருக்கத்துக்கு ஆப்பிரிக்கா உதவியுள்ளது என்றாா்.

சிஐஐ தலைவரும், ஐடிசி நிா்வாக இயக்குநருமான சஞ்சீவ் புரி, சிஐஐ ஆப்பிரிக்கா குழு தலைவரும், டாடா இன்டா்நேஷனல் நிறுவனத் தலைவருமான நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநா் சந்திரஜித் பானா்ஜி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.