பிரதமா் மோடியுடன் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியது.
போலந்து பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து உக்ரைன் தலைநகா் கீவ்-க்கு வந்தடைந்தாா். இதையடுத்து அந்நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை மோடி சந்தித்தாா்.
சந்திப்பின்போது மோடியுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிா்ந்து ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான உரையாடல் மற்றும் உறவை வலுப்படுத்தும் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானது’ என குறிப்பிட்டிருந்தாா்.
அவரின் இந்த பதிவானது பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே ஸெலென்ஸ்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அதிகம் விரும்பப்பட்ட பதிவாக மாறியது. சில மணிநேரங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
பல்வேறு சமூக ஊடக தளங்களில் எந்த ஒரு சா்வதேச தலைவா்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிக பின்தொடா்வோரை மோடி கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு
பதவியேற்ற ஓராண்டுக்குள் உக்ரைன் பிரதமர் ராஜிநாமா!







