நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்து பாடகி கெனிஷாவுடன் வாழ்த்து வருகிறார். மேலும், தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி 4 படங்களைத் தயாரிப்பதுடன் யோகி பாபுவை வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இதற்கிடையே, ஆர்த்தியை விட்டு கெனிஷாவுடன் சென்றுவிட்டார் என பலரும் ரவி மோகனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வசைபாடி எதிர்மறையான எண்ணங்களைப் பதிவிட்டனர்.
இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு ரவி மோகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நிம்மதியாக என்னைக் கட்டமைத்து வருகிறேன். திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் எப்போதும் பெண்கள்தான் சரியானவர்கள் என நினைக்கிறீர்கள். உண்மையில், ஆண்கள்தான் பாதிக்கப்படுபவர்கள். இதை நம் நீதித்துறையும் உணர்ந்தே இருக்கிறது.
என்னால் நேசிக்கப்பட்டவர்களுக்காக நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் அனைவரும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள். உங்களின் அருவருப்பான எண்ணங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழிக்குத் திரும்புகிறேன். வாழ விடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor ravi mohan writes about the negativity and personal life decisions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!
வீட்டு பணிப்பெண்களைச் சிறைப்பிடித்த ரவி மோகன்?
ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல் வெளியீடு!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



