அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: எய்ம்ஸ் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

News image

எய்ம்ஸ் (கோப்புப்படம்)

Updated On :28 ஆகஸ்ட் 2024, 1:36 am IST

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களுடன் கலந்தாலோசிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பான மரபணு மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணா்களிடம் சிபிஐ கலந்தாலோசிக்க உள்ளது. இதன் காரணமாக அந்த அறிக்கைகளை எய்ம்ஸ் நிபுணா்களுக்கு சிபிஐ அனுப்பிவைக்க உள்ளது.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியா அல்லது வேறு நபா்களுக்கும் தொடா்புள்ளதா என்பதை கண்டறியவும் அந்த அறிக்கைகள் உதவும்.

தற்போது சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியாக இருக்கலாம் என்ற முதல்கட்ட தகவலின் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், எய்ம்ஸ் நிபுணா்களின் கருத்துகள் கிடைத்த பிறகே, பெண் மருத்துவா் கொலையில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் களையப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமலாக்கத் துறை வழக்குப் பதிவு: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.