பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கரூர் சம்பவம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை நடைபெறுவது தொடர்பாக..

Karur incident

சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வந்த முன்னாள் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் - file photo

Published On :

கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர்.

தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி நெரிசல் சம்பவம் நிகழ்ந்த போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கரூர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையும் முடங்கி இருந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி முதல் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதல் நாளில் வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸாரிடமும், இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே நெரிசல் சம்பவம் நிகழ்ந்தபோது கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நெரிசல் சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த பிரேமானந்தத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CBI officials questioned the former Additional Superintendent of Police of Karur district on Saturday morning regarding the tragic incident in Karur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.