மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஏ.ஜி. நூரனி காலமானார்!

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

News image

ஏ.ஜி. நூரனி - படம்: ANI

Updated On :29 ஆகஸ்ட் 2024, 10:10 pm IST

மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் வல்லுநர், சிறந்த வழக்குரைஞர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக வலம் வந்தவர் அப்துல் கஃபூர் நூரனி. நண்பர்களால் நூரனி அல்லது கஃபூர் பாய் என அறியப்பட்டவர்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அந்த புத்தக வேலைகள் முடிவடையும் முன்னரே உயிரிழந்துள்ளார்.

நடமாடும் அறிவுக்களஞ்சியம் எனவும் ஏ.ஜி. நூரனியை பலரும் புகழ்வது வழக்கம். பல்வேறு தலைப்பின் கீழ் நூரனி புத்தகங்களை எழுதியுள்ளார். காஷ்மீர் விவகாரம், இந்தியா - சீனா விவகாரம், ஹைதராபாத், அடிப்படை உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான ஏ.ஜி.நூரனியின் இழப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முகத் திறன் கொண்டவரான ஏ.ஜி. நூரனியின் வயது 94.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.