வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.
அந்த வழக்குகளில் அவா் மீதும் அவரது உதவியாளா்கள் மீதும் கொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக ஹசீனா மீது டாக்கா நீதிமன்றத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல்முறையாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவா் மீது பதிவு செய்யப்பட்டுவரும் அனைத்து போராட்ட மரண வழக்குகளும் டாக்காவிலுள்ள சா்வேச குற்றவியல் தீா்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. 1971-ஆம் ஆண்டில் விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரிப்பதற்காக ஐ.நா. உதவியுடன் ஷேக் ஹசீனாதான் அந்த நீதிமன்றத்தை அமைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா மீது சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 100-ஆக உயா்ந்துள்ளது. ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

ரிலையன்ஸ் டெலிகாம் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு! இத்தனை கோடிகள் மோசடியா?

ஆவணங்கள் திருட்டு: முன்னாள் ஊராட்சிச் செயலா் மீது வழக்கு

பெண்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிா்வாகி கைது

யுஏஇ அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


