ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

பழுதான ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்து

News image

விபத்துக்குள்ளான கிரிஸ்டல் ஹெலிகாப்டர்

Updated On :31 ஆகஸ்ட் 2024, 11:20 am IST

பழுதான ஹெலிகாப்டரை பழுது பார்க்கக் கொண்டு செல்லப்பட்டபோது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

உத்தரகண்டில் பழுதான கிரிஸ்டல் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை, கேதார்நாத்திலிருந்து கௌச்சார் விமான நிலையத்திற்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம், இன்று காலையில் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்று காரணமாக எம்ஐ-17 ஹெலிகாப்டர், தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக, ஹெலிகாப்டர் தாரு முகாமுக்கு அருகில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மண்டாகினி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இருப்பினும், கிரிஸ்டல் ஹெலிகாப்டரில் பயணிகளோ அல்லது சாமான்களோ எதுவும் இல்லாததால், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.