ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கர்நாடகத்தில் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 3 பெண்கள் பலி

கர்நாடகத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 3 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
விபத்துக்குள்ளான பேருந்து.
Updated On :2 டிசம்பர் 2024, 6:18 am

DIN

கர்நாடகத்தில் தடுப்புச் சுவரில் பேருந்து மோதியதில் 3 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சிரா வட்டத்தில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தின் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் திங்கள்கிழமை அதிகாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 பயணிகளுடன் கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து அதிகாலை 4.30 மணியளவில் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலியானவர்கள் ஷெபாலி சிங், உர்வி மற்றும் பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.