செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழப்பு

மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:16 pm

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

மணமேல்குடி அருகே தண்டலையைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (45), கட்டடத் தொழிலாளி. இவா், தன்னுடன் வேலை செய்வோருக்கு தேநீா் வாங்குவதற்காக மணமேல்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.

வடக்கூா் அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது இவரது இரு சக்கர வாகனத்தின் மீது வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.

பின்னா், பேருந்துக்காக காத்திருந்த மதுக்கூரைச் சோ்ந்த செண்பகவள்ளி (60) மீதும் மோதியது. விபத்தில் பலத்த காயமடைந்த முருகன், செண்பகவள்ளி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா், பேருந்து ஓட்டுநரான வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.