தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்

அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்

News image

நாடாளுமன்றம்

Updated On :3 டிசம்பர் 2024, 12:16 am

Din

புது தில்லி: அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி, அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான விவாதம் மக்களவையில் டிச. 13, 14-ஆம் தேதிகளிலும், மாநிலங்களவையில் டிச. 16, 17-ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இத் தகவலை திங்கள்கிழமை தெரிவித்த நாடளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மத்திய அரசு - எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் மூலம், நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை முதல் சுமுகமாக நடைபெற வாய்ப்புள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் மீது விவாதம் நடத்த வலியுறுத்தும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு அந்த விவாதங்களுக்கு அனுமதிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் கடந்த நவ. 26-ஆம் தேதி நடைபெற்றது. அப்போதே, இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.