மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தூர் விடுதியில் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

மாணவி விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:46 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இளங்கலைப் பட்டம் பயின்றுவந்த மாணவி விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாலியரில் வசிக்கும காஷிஷ் பத்வானி. இவர் இந்தூரில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்றுவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதியில் தங்கிப் படித்துவந்த அவர், குளியலறைக்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடன் தங்கியிருந்த மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவம் நடந்த விடுதி லசுடியா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இறந்த பெண்ணின் பெற்றோர் குவாலியரில் வசிக்கின்றனர், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உடலை பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பத்வானி நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் விடுதியில் வசித்து வந்தார்.

விசாரணையின் போது, பத்வானி மனமுடைந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும், எந்த பிரச்னையையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்று விடுதி மாணவிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அவரது மொபைல் போனின் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாணவி உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.