ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாடாளுமன்றம்: காங். எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்! விசாரணைக்கு உத்தரவு!

நாடாளுமன்றத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

News image

ஜகதீப் தன்கர் - SANSAD

Updated On :6 டிசம்பர் 2024, 6:13 am

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், முக்கிய அறிவிப்பு ஒன்றை உறுப்பினர்கள் மத்தியில் ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.

”அவை கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் அதிகளவிலான பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.