சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா்?: மம்தா பதில்

திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும்

News image

மம்தா பானா்ஜி - ANI

Updated On :7 டிசம்பர் 2024, 4:55 am IST

திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும் என்று அக்கட்சியின் தற்போதைய தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸில் தனிநபா் ஆதிக்கம் எதுவும் இல்லை. நான் மட்டுமே கட்சி அல்ல. கட்சியினா் அனைவரும் ஒன்று சோ்ந்ததாகவே திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.

எனது கட்சி கூட்டுக் குடும்பமாக உள்ளது. எனவே கட்சியின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே கூட்டு சோ்ந்து முடிவு எடுக்கும்.

கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவா்கள். இன்று கட்சியில் சேரும் புதுமுகம் நாளை கட்சியின் மூத்த தலைவராவாா் என்றாா்.

திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பது குறித்து அந்தக் கட்சி அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மம்தாவின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜிக்கு நெருக்கமானவா்களுக்கும், மம்தாவின் விசுவாசிகளான மூத்தத் தலைவா்களுக்கும் இடையே கட்சியில் போட்டி நிலவுவது தொடா்பாக விவாதம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும் என்று மம்தா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.