காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இதனால் இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனதுடன் கல்யாண் பானர்ஜி பேசியதாவது,
’’தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ள புரிந்துகொள்ள வேண்டும். இதனை சமீபகாலமாகவே கூறிவருகிறோம். இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி பதவியேற்பது கூட்டணி நலனுக்கு சாதகமாக அமையும். தலைமை பொறுப்பேற்க மற்ற தலைவர்களைக் காட்டிலும் மமதா பானர்ஜியின் பெயர் முதன்மை இடத்தில் உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ’’இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமை பொறுப்பேற்க வேண்டும். இதில் காங்கிரஸ் ஆட்சேபனை அர்த்தமற்றது. மமதா தலைமையேற்றால் 2025-ல் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்’’ எனக் கூறினார்.
இதனால் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ளது.
லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியை வலுப்படுத்த விரும்பினால்.. சஞ்சய் ரெளத் கருத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிக பேச்சு: மக்களவையில் திரிணமூல் எம்.பி. இடைநீக்கம் - மூன்றாவது நாளாக அமளி

கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்: திரிணமூல் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்! பாஜக

‘பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்’ - மமதா சவால்!

திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



