வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி தோல்வி! திரிணமூல் எம்.பி.,

காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. விமர்சனம்.

News image

எம்.பி. கல்யாண் பானர்ஜி - ANI

Updated On :10 டிசம்பர் 2024, 6:59 pm IST

காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இதனால் இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனதுடன் கல்யாண் பானர்ஜி பேசியதாவது,

’’தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ள புரிந்துகொள்ள வேண்டும். இதனை சமீபகாலமாகவே கூறிவருகிறோம். இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி பதவியேற்பது கூட்டணி நலனுக்கு சாதகமாக அமையும். தலைமை பொறுப்பேற்க மற்ற தலைவர்களைக் காட்டிலும் மமதா பானர்ஜியின் பெயர் முதன்மை இடத்தில் உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணிக்கு முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ’’இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமை பொறுப்பேற்க வேண்டும். இதில் காங்கிரஸ் ஆட்சேபனை அர்த்தமற்றது. மமதா தலைமையேற்றால் 2025-ல் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்’’ எனக் கூறினார்.

இதனால் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே தலைமை குறித்து விவாதம் எழுந்துள்ளது.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.