மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!

பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவிப்பு.

News image

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் - ANI

Updated On :11 டிசம்பர் 2024, 1:07 pm

பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2015 ஏப்ரல் முதல் செயல்பட்டுவரும் பெண்கள் உதவி எண் திட்டத்தின் மூலம் அக்டோபர் மாத இறுதிவரை 81.64 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிஷன் சக்தி என்ற திட்டத்தின் குடையின் கீழ் பெண்கள் உதவி எண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

181 என்ற உதவி எண் மூலம் 24 மணிநேரமும் வாரத்தின் அனைத்து நாள்களுக்கும் - ஆண்டு முழுவதும் பெண்களுக்கு தொலைத்தொடர்பு மூலம் உதவவும், வழிநடத்தவும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

காவல் துறை, மருத்துவமனை, போன்ற அரசு சார்ந்த பொருத்தமான துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் உதவவும் வழிவகை செய்யப்படுகிறது.

கூடுதலாக, பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களும் இந்த உதவி எண் மூலம் வழங்கப்படுகிறது.

தற்போது 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் உதவி எண் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 81.64 பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண்கள் உதவிஎண் மையம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மிஷன் சக்தி திட்டத்தின் வழிகாட்டுதல்கள்படி, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களுமே இத்திட்டத்தை அலம்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

உதவி எண் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.