நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பிஎஸ்என்எல் 6ஜி திட்டம்..! தொலைத்தொடர்பு அமைச்சகம் தகவல்

‘4ஜி சேவையளிக்கும் ஒரு லட்சம் சாதனங்களை’ நாடெங்கிலும் நிறுவும் பணியில் பிஎஸ்என்எல்...

News image
Updated On :11 டிசம்பர் 2024, 12:56 pm

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 6ஜி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லில் 6ஜி திட்டமும் உள்ளது என்றார்.

முன்னதாக கடந்த அக்டோபரில் தில்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 6ஜி சேவையில் இந்தியா முன்னோடியாகத் திகழும் என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் டாக்டர் பெம்மசனி சந்திர சேகர் தெரிவித்திருப்பதாவது, ‘பிஎஸ்என்எல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ள ‘4ஜி சேவையளிக்கும் ஒரு லட்சம் சாதனங்களை’ நாடெங்கிலும் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த வடிவமைப்பு 5ஜி சேவைக்கும் மேம்படுத்தி பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

நாட்டில் தொலைத்தொடர்பு சேவை இல்லாத கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையளிக்கும் அரசின் தொலைநோக்குத் திட்டங்களான, 4ஜி தன்னிறைவுத் திட்டம், லட்சத்தீவுகளில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பிற திட்டங்களை இலக்காகக் கொண்டு பிஎஸ்என்எல் செயலாற்றுகிறது.

மேலும், செயல்பாட்டிலுள்ள பாரத்நெட் திட்டம் மத்திய அமைச்சரவையால கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டதன்மூலம், அதிவேக எஃப்டிடிஹெச் புதைவடம் வழியாக தொலைத்தொடர்பு சேவை கிராமப்புற பகுதிகளில் வழங்கிடவும், அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஒன்றரை கோடி எஃப்டிடிஹெச் இணைப்புகள் வழங்கிடவும் பிஎஸ்என்எல் மேற்பார்வையில் பணி நடைபெறுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.