FOLLOW US

ON GOOGLE DISCOVER

பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து...

News image

TN Budget 2026-27: TVK govt sets sight on $1.5 trillion economy by 2031; focuses on education and fiscal transparency - கோப்புப்படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:44 am IST

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதில், பெண்கள், இளைஞா்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது.

தமிழ்நாட்டை வறுமையில்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி அதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் மாநிலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

* அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகளில் மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக பத்தாயிரம் பள்ளிகளில் இந்த பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு

* 3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம். நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக்கல்விக்கு ரூ.44.527 கோடி நிதி ஒதுக்கீடு

* பள்ளிகளில் போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1058 என்ற உதவி எண் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 5,32 லட்சம் பேருக்கு தலைக்கவசம், வாட்டர்பாட்டில் வசதிகளுடன் ரூ.277 கோடி மதிப்பில் நவீன சைக்கிள் வழங்கப்படும்.

* பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பு செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* செய்யறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கு நிபுணர் குழு அமைப்பு

நீட் தேர்வை தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

* டிஜிட்டல் மாற்றத்திற்கேற்ப தமிழகத்தை உருவாக்க திட்டம்.

* தனித்துவமான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தினை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.

* பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு.

* அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

* சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு.

* 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டடப்படும்.

* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு.

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி நிதி ஒதுக்கீடு

* மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தவெக அரசின் பல்வேறு நடவடிக்கையால் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது.

* வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணன் சீர்

* பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

விளையாட்டுப் பயிற்சி

* பள்ளி நேரத்திற்கு பிறகு நாள்தோறும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

* விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு.

கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினித் திட்டம்

* திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு. இந்த திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

* கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து தேவையை பூர்த்தி செய்ய தடையற்ற மருந்து விநியோகம் செய்யப்படும்.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு.

* கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.

* மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து இங்கு பயன்பெறலாம், கட்டணமில்லா உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வவங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு.

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்

* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கப்படும்.

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். மொத்தம் 30,000 பயனாளிகளுக்கு இந்தி திட்டம் செயல்படுத்தப்படும்.

* சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு.

* கால்நடைகள் காப்போம் திட்டத்துக்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு.

* திருப்பூரில் ரூ.10 கோடியில் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம் அமைக்கப்படும்.

* தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு.

* செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை மாநிகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் இந்த திட்டம் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

* வீட்டு மேற்கூரை சூரிய மின் மானிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். சூரிய மின்பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8,852 கோடி நிதி ஒதுக்கீடு.

உலகத்தரத்திற்கு சென்னையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5,904 கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவுப்படுத்தப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான விரிவான முழுமையான திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

உலக நகரங்களை உருவாக்க இலக்கு

* முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர், சாலைகள், கழிவுநீர், போக்குவரத்து, பசுமை மற்றும் மின் ஆளுமை ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் 2031 ஆம் ஆண்டுக்குள் உலக நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு

அடையாறு-கூவம் ஆற்றில் படகு போக்குவரத்து

* சென்னை அடையாறு, கூவம் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கும், அழகுப்படுத்துவதற்கு முந்தைய அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தும் மாற்றங்கள் நடைபெறவில்லை. கூவம், அடையாறு ஆறுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்த அரசு பாடுபடும். குளோபல் டெண்டர் கோரப்பட்டு விரைவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆறுகள் சுத்தம் செய்யப்படும்.

அடையாறு, கூவம் ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செயவதையும், ஆனந்த குளியல் போடுவதையும், கரைகளில் உயற்பயிற்சி செய்வதையும் இந்த அரசு உறுதி செய்யும்.

* நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கீடு.

Summary

Key highlights of the TVK government's first budget...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.