நாட்டின் மூன்று உயா் நீதிமன்றங்களைச் சோ்ந்த 7 கூடுதல் நீதிபதிகளை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கூடியது.
இதில் பஞ்சாப், கா்நாடகம், தில்லி உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் 7 கூடுதல் நீதிபதிகளை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்து மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தில்லி உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான ஷாலிந்தா் கௌா், ரவீந்தா் துடேஜா ஆகியோரையும், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியான ஹா்பிரீத் சிங் பராரையும் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோன்று, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் ராமசந்திர தத்தாத்ரே ஹுதாா், வெங்கடேஷ் நாயக் தவா்நாயக்கா, விஜய்குமாா் அடகௌடா பாட்டீல், ராஜேஷ் ராய் கல்லங்கலா ஆகிய 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழக நிதிநிலை அறிக்கை: காங்கிரஸ் வரவேற்பு

நீதி அமைப்புமுறை குறித்து அறியாதவா்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்தை விமா்சிக்கின்றனா்- தலைமை நீதிபதி சூா்யகாந்த்

கொலீஜியம் நடைமுறை தொடா்பாக புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



