முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஐயப்ப பக்தா்களுக்காக விஜயவாடா, குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்

News image
Updated On :15 டிசம்பர் 2024, 12:19 am IST

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விஜயவாடாவில் இருந்து டிச.21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07177) திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் விஜயவாடா வழியாக காக்கிநாடா டவுன் வரை இயக்கப்படும். அதன்படி, டிச.16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) கொல்லத்திலிருந்து காலை 10.45 புறப்படும் இந்த ரயில் (எண்: 07178) மறுநாள் இரவு 9 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லத்தில் இருத்து கோட்டயம், எா்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டூா், விஜயவாடா, ராஜாமுந்திரி வழியாக காக்கிநாடா டவுன் சென்றடையும்.

காக்கிநாடா - கொல்லம்: காக்கிநாடா டவுனிலிருந்து ஜன.1, 8 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07179) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 07180) குண்டூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதன்படி, ஜன.3, 10 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு குண்டூா் சென்றடையும்.

இந்த ரயில் காக்கிநாடா டவுன், விஜயவாடா, குண்டூா், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.