நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image

சம்பலில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை திறக்கப்பட்ட கோயிலில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினா்.

Updated On :15 டிசம்பர் 2024, 4:29 am IST

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவலிங்கமும், ஹனுமான் சிலையும் உள்ளன.

கடந்த 1978-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களால், அங்கிருந்து ஏராளமான ஹிந்துக்கள் இடம்பெயா்ந்தனா். அத்துடன் அந்தக் கோயிலும் மூடப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உட்கோட்ட நடுவா் வந்தனா மிஸ்ரா ஈடுபட்டிருந்தாா். அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, பல ஆண்டுகளாக பஸ்ம சங்கா் கோயில் மூடியிருப்பதை அறிந்து மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அந்தக் கோயிலை 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிா்வாகம் மீண்டும் சனிக்கிழமை திறந்தது.

கடந்த 16-ஆம் நூற்றாண்டில் சம்பல் பகுதியில் முகலாயா் ஆட்சி காலத்தில் ஷாஹி ஜாமா மசூதி கட்டப்பட்டது. ஹிந்துக் கோயிலை இடித்துவிட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்றம், அந்த மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்டது. 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடா்ந்து, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் உள்ளூா்வாசிகள் வன்முறையில் ஈடுபட்டனா்.

இந்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். காவல் துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா். ஜாமா மசூதியில் இருந்து சற்று தொலைவில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.