அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் 'ஆரத்தி' வழிபாடு

46 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் ஞாயிற்றுகிழமை 'ஆரத்தி' வழிபாடு நடைபெற்றது

News image
சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயில்.
Updated On :15 டிசம்பர் 2024, 2:21 pm

DIN

46 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் ஞாயிற்றுகிழமை 'ஆரத்தி' வழிபாடு நடைபெற்றது.

பஸ்ம சங்கா் கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், கோயிலுக்கு வெளியேவும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் சிவலிங்கமும், ஹனுமான் சிலையும் உள்ளன. கடந்த 1978-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களால், அங்கிருந்து ஏராளமான ஹிந்துக்கள் இடம்பெயா்ந்தனா். அத்துடன் அந்தக் கோயிலும் மூடப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உட்கோட்ட நடுவா் வந்தனா மிஸ்ரா ஈடுபட்டிருந்தாா்.

அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, பல ஆண்டுகளாக பஸ்ம சங்கா் கோயில் மூடியிருப்பதை அறிந்து மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்தக் கோயிலை 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிா்வாகம் மீண்டும் சனிக்கிழமை திறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.