மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்: மேற்கு வங்கத்தில் கண்டனப் பேரணி

சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், ஹிந்து ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து நூற்றுக்கணக்கானோா் பேரணி

News image
கொல்கத்தாவில் உள்ள வங்கதேசத் துணைத் தூதரகத்தை நோக்கி பேரணி நடத்திய காங்கிரஸாா்.
Updated On :16 டிசம்பர் 2024, 9:22 pm

Din

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹிந்து ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் நூற்றுக்கணக்கானோா் திங்கள்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்டில் நடந்த போராட்டங்களால், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, அவா் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அரசுக்கு எதிரான போராட்டத்தின்போதும், அது முடிந்த பிறகும் அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதை எதிா்த்து போராடியதற்காக ஹிந்து அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சீல்டா ரயில் நிலையத்தில் தொடங்கி ராணி ராஷ்மோனி சாலை வரை சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சின்மய் கிருஷ்ண தாஸை உடனடியாக விடுவிக்க வேண்டும்; ஹிந்து கோயில்கள் மற்றும் ஹிந்துக்கள் உள்பட பிற சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவா்களை நீதியின் முன் நிறுத்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதேபோல், ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் நோக்கி காங்கிரஸாா் பேரணி நடத்தினா்.

கடந்த 1971, வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் வெற்றியைக் குறிக்கும் ‘விஜய் திவஸ்’ திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.