கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொது, தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்!

நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண்கள் நிர்வாக இயக்குநர்களாக உள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :17 டிசம்பர் 2024, 4:37 pm

DIN

நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண்கள், நிர்வாக இயக்குநர்களாகப் பணிபுரிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் மேம்பாட்டின் ஒருபகுதியாக பல்வேறு தளங்களில் முக்கியமான முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

இது குறித்து பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''நிறுவனங்கள் சட்டம் 2013-ன் மூலம் பெரு நிறுவனங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க பெருநிறுவன விவகாரங்கள் துறை ஊக்குவிக்கிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் வரும் நிறுவனங்கள் தலைமை இயக்குநர்களில் அவசியம் ஒரு பெண் இடம்பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

மூலதனமாக ரூ. 100 கோடி செலுத்திய அல்லது ஆண்டுக்கு ரூ. 300 கோடி வருவாய் ஈட்டும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டியது கட்டாயம்.

இதனைச் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 172-ன் படி அபராதம் விதிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் (நவ. 30 வரை) பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1,12,962-ஆக உள்ளது.

இதன் விளைவாக தற்போது பல தனியார் நிறுவனங்களில் 11,11,040 பெண் இயக்குநர்கள் உள்ளனர். பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களில் 46,939 பெண்கள் தலைமை இயக்குநர்களாக உள்ளனர். பொதுத் துறை நிறுவனங்களில் 8,672 பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.