நாட்டின் நகர்ப்புறத்தில் உள்ளவர்களில் 9.38 லட்சம் மக்களுக்கு வீடுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரான தில்லியில் மட்டும் 46,724 குடிமக்கள் வீடின்றி வசித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தோஹன் சாஹு,
2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,80,929 மக்கள் வீடின்றி வசித்துவருவதாகக் கூறினார்.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 1,11,373 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,04,967 பேரும் வீடின்றி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சாஹு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சொந்த வீடுகளின்றி வசித்துவரும் குடிமக்கள் குறித்த தரவுகளும் சேகரிக்கப்படுகிறது. 2011 கணக்கெடுப்பின்படி 9,38,348 மக்கள் வீடின்றி வசித்து வருகின்றனர் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகரத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! பெண்கள் நிலை?

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



