மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :18 டிசம்பர் 2024, 4:27 pm

DIN

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், விபத்துகளும் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்தவாறு உள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்கள்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இதனைத் தடுக்கவே `விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம்’ என்ற இலக்கை புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை நிர்ணயித்துள்ளது. சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலம் சாலை விபத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற ஜனவரி முதல் தேதியில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மேலும், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளோ ஊழியர்களோ தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 1000 அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.