தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 டிசம்பர் 2024, 9:57 pm IST

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், விபத்துகளும் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்தவாறு உள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்பவர்கள்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இதனைத் தடுக்கவே `விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம்’ என்ற இலக்கை புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை நிர்ணயித்துள்ளது. சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலம் சாலை விபத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற ஜனவரி முதல் தேதியில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மேலும், அனைத்துத் துறை அரசு அதிகாரிகளோ ஊழியர்களோ தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 1000 அபராதமும் விதிக்கப்படுவதுடன், அவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.