அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்.

News image
ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா
Updated On :20 டிசம்பர் 2024, 7:28 am

DIN

இந்திய தேசிய லோக் தள தலைவரும் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.

குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓம் பிரகாஷ் சௌதாலா, ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக 1989ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து சாதனை படைத்தவர். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹரியாணா மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராகவும் முன்னாள் துணை பிரதமராகவும் இருந்த சௌதாரி தேவி லால் மகன் ஆவார். இவரது குடும்பம், ஹரியாணா அரசியலில் மிகவும் செல்வாக்கு பெற்றதாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.