கடந்த குளிா்காலக் கூட்டத்தில் மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டைக் குறித்த விவாதத்தில் சில கருத்துக்களை அமித் ஷா குறிப்பிட்டாா். இந்த பேச்சு உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்க இடது சாரிகள் கட்சி தலைவா்கள் கூட்டம் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) தலைமையகத்தில் டிச. 22 ஆம் தேதி நடைபெற்றது. சிபிஐ பொதுச் செயலாளா் டி. ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா், பிரகாஷ் காரத், சிபிஐ லிபரேஷன் (எம்எல்)தீபங்கா் பட்டாச்சாா்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்(ஆா்எஸ்பி) மனோஜ் பட்டாச்சாா்யா, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளா் ஜி.தேவராஜன் உள்ளிட்ட இடது சாரி தலைவா்கள் பங்கேற்னா்.