திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

உ.பி. கோயில் படிக்கிணற்றில் மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிப்பு!

உ.பி. கோயிலில் பழங்காலத்து, மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி

News image

சுரங்கம் - -

Updated On :23 டிசம்பர் 2024, 6:17 pm IST

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணற்றைத் தோண்டி ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்க வளாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப் பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்க வளாகமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் இருந்த படிக்கிணற்றைச் சுத்தம் செய்து அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டதில் 1957-ல் பயன்படுத்தப்பட்ட இந்த பிரமாண்டமான சுரங்கப் பகுதி தெரிய வந்தது.

Story image

இந்த சுரங்கமானது மூன்று நிலைகளைக் கொண்டு, 400 சதுர மீட்டர் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில தளங்கள் மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது என்று சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா தெரிவித்துள்ளார்.

பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் இந்த சுரங்க வளாகம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இந்த சுரங்கம் முழுவதும் மண்ணுக்கடியில் மூடியிருந்ததாகவும் தற்போதைக்கு 210 சதுர மீட்டர் இடம் மட்டுமே வெளியில் இருக்கிறது. சுரங்கம் உள்ள மற்ற பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக அகழாய்வுப் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story image

-

முன்னதாக, இந்தக் கோவில் குறித்துப் பேசிய அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அதில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்தக் கிணறு மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பழைய எல்லை வளாகத்துக்குள் இந்தக் கிணறு அமைந்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுப் பணிகளின் விளைவாக ஐந்து தீர்த்தங்கள், 19 தீர்த்தக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதி சுமார் 24 ஏக்கரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.