சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உ.பி. கோயில் படிக்கிணற்றில் மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிப்பு!

உ.பி. கோயிலில் பழங்காலத்து, மிகப் பிரமாண்ட சுரங்க வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி

News image

சுரங்கம் - -

Updated On :23 டிசம்பர் 2024, 2:02 pm IST

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கோயிலின் படிக்கிணற்றைத் தோண்டி ஆய்வு செய்தபோது, அதற்குள் ஒரு மிகப் பிரமாண்டமான சுரங்க வளாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது, மிகப் பெரிய படிக்கிணறும், அதற்குள் சுரங்க வளாகமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் இருந்த படிக்கிணற்றைச் சுத்தம் செய்து அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டதில் 1957-ல் பயன்படுத்தப்பட்ட இந்த பிரமாண்டமான சுரங்கப் பகுதி தெரிய வந்தது.

Story image

இந்த சுரங்கமானது மூன்று நிலைகளைக் கொண்டு, 400 சதுர மீட்டர் அளவுக்குக் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில தளங்கள் மார்பிள் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது என்று சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா தெரிவித்துள்ளார்.

பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் இந்த சுரங்க வளாகம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இந்த சுரங்கம் முழுவதும் மண்ணுக்கடியில் மூடியிருந்ததாகவும் தற்போதைக்கு 210 சதுர மீட்டர் இடம் மட்டுமே வெளியில் இருக்கிறது. சுரங்கம் உள்ள மற்ற பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக அகழாய்வுப் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story image

-

முன்னதாக, இந்தக் கோவில் குறித்துப் பேசிய அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அதில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்தக் கிணறு மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பழைய எல்லை வளாகத்துக்குள் இந்தக் கிணறு அமைந்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுப் பணிகளின் விளைவாக ஐந்து தீர்த்தங்கள், 19 தீர்த்தக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதி சுமார் 24 ஏக்கரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.