கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை தோப்புகுளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட தோப்புகுளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளம் முள்ளங்கனாவிளை ஊராட்சியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இங்கு, ஆழ்துளைக் கிணறு, உறை கிணறு மூலமும் ஊராட்சி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
குறிப்பாக, இடையன்கோட்டை, காரிவிளை, வடலிவிளை, நல்லான்தறை, காசிப்பாறை, செவ்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1000- க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் விநியோகித்து வருகின்றனா்.
இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் புல், புதா்கள் மண்டி, மழை காலங்களில் மழைநீா் தேங்க முடியமால் தூா்ந்து காணப்படுகிறது. மேலும், அருகேயுள்ள ஆழ்துளைக் கிணறு, உறை கிணற்றிலும் தண்ணீரின்றி வடு காணப்படுகிறது.
இதனால், இப்பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் குளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிராம மக்களுக்கு குடிநீா் வசதி: எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

களக்காடு நான்குனேரியன் கால்வாய் படித்துறைகளை சீரமைக்கக் கோரிக்கை

ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



