ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர்கள் தில்லியைச் சேர்ந்த விக்கி மற்றும் விபின் என்றும், ஹிசாரைச் சேர்ந்த நியா என்றும் அடையாளம் காணப்பட்டதாகப் பிஞ்சோர் போலீஸார் தெரிவித்தனர்.
உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாதவர்களால் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது மூவரும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர் என்று பஞ்ச்குலா காவல் உதவி ஆணையர் அரவிந்த் காம்போஜ் தெரிவித்தார்.
30 வயதுடைய விக்கி, குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் சில வழக்குகளை எதிர்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகளையும், மற்ற தடயங்களைச் சேகரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பரங்குன்றம் அருகே இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

குருகிராம்: முன்னாள் என்எஸ்ஜி கமாண்டோ சுட்டுக் கொலை

ப்ரீத் விஹாா்: வாகன நிறுத்தத் தகராறில் இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


