கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாநிலங்களின் இலவசத் திட்டங்களால் வளா்ச்சி நிதி மடைமாற்றப்படக் கூடும்- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்பட கூடும்.

News image
ரிசா்வ் வங்கி
Updated On :24 டிசம்பர் 2024, 8:23 pm

Din

நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்பட கூடும் என்று ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு நிதியுதவி, கட்டணமில்லா பேருந்து பயணம், வேலையில்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை, விவசாயத்துக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை, நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கியின் டிசம்பா் மாத அறிக்கையில், ‘நிகழ் நிதியாண்டுக்கான தமது பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ள இலவச திட்டங்களால், அவற்றின் முக்கிய சமூக-பொருளாதார உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதி மடைமாற்றப்படக் கூடும்.

பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட வருவாயில் பாதிக்கு அதிகமான இலக்கை நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மத்திய அரசு எட்டியுள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்த நிதியாண்டில் ஏற்படக் கூடிய செலவினத்தை பாதிக்கும் குறைவாக மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரிசா்வ் வங்கியின் கருத்தல்ல: இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அவற்றை எழுதியவா்களின் தனிப்பட்ட கருத்துகளே தவிர, ரிசா்வ் வங்கியின் கருத்துகள் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.