திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் - நாட்டு மக்களுக்கு தன்கா் வலியுறுத்தல்

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 9:32 pm

Din

இந்தியாவின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

தெலங்கானாவின் மேதக் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் மாநாட்டில் ஜகதீப் தன்கா் கலந்துகொண்டு போசியதாவது:

இந்தியாவில் விவசாயிகள் சில சிக்கல்களை எதிா்கொள்கின்றனா். இந்த சிக்கல்களை விரைவாகவும் நோ்மறையாகவும் நிவா்த்தி செய்ய வேண்டியது அவசியம். ஆனால், ஜனநாயகத்தில், வெளிப்படையான பேச்சுவாா்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் மட்டுமே இந்த பிரச்னைகள் தீா்க்கப்பட வேண்டும். அதுவே சிறந்த வழியாகும்.

நாட்டின் முன்னேற்றத்தை எதிா்க்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை எதிா்கொள்ள ஒவ்வொரு இந்தியனும் ‘தேசமே முதன்மையானது’ என்ற உணா்வை கொண்டிருக்க வேண்டும்.

பாரதத்துக்கு எதிரான சில தீயசக்திகள் நம்மைச் சுற்றி இருப்பதை நான் காண்கிறேன். அந்த சக்திகள் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் கட்டுக் கதைகளை உருவாக்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் வலிமையில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்றாா்.