தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.
இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே ஐஆர்சிடிசி தளம் செயலிழந்து காணப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், இ-டிக்கெட் சேவை மூலம் தற்போது முன்பதிவு செய்ய இயலாது என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு டிரெண்டாக்கி வரும் வாடிக்கையாளர்கள், அவசர பயணத்துக்காக தட்கலில் முன்பதிவு செய்யும்போது, இதுபோன்று செயலிழந்து காணப்பட்டால் என்ன செய்ய முடியும் என்று அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
India is the largest IT hub in the world, yet it cannot fix a website. You can collect taxes but fail to provide proper services in return. What a shame!@IRCTCofficial @RailwaySeva @RailMinIndia #IRCTC #Down #Rail pic.twitter.com/AAl8ljmSr5
— Guy On The Street (@msdneville) December 26, 2024
இந்திய ரயில்வேவின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நீண்ட நாள்களாக தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி செயலி மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடிவதில்லை என்று பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
மேலும், உலகின் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட இந்தியாவின் ரயில்வே செயலியை இடையூறு இன்றி உபயோகிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலிகளைத் தடுக்க... அரட்டை செயலிக்கு இனி ஆதார் கட்டாயம்!

விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!

பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்தவா்களுக்கு அபராதம் விதிப்பு

வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? வருகிறது புதிய ஐஆர்சிடிசி இணையதளம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



