தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர் மன்மோகன் சிங்: சித்தராமையா

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங்..

News image
கா்நாடக முதல்வர் சித்தராமையா
Updated On :27 டிசம்பர் 2024, 7:12 am

DIN

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மன்மோகன் சிங் மிகவும் மரியாதைக்குரிய மனிதர். எளிமையான, நேர்மையான அரசியல்வாதி. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை மாற்றியமைத்தவர் என்று அவர் நினைவுகூர்ந்தார்.

அவரின் வாழ்க்கை ஒருவிதத்தில் அதிசயம்தான். பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த அவர், உலகின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த அவர், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம், நாடு எதிர்கொண்டிருந்த நிதி நெருக்கடியைத் தீர்த்து வைத்தவர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார். பத்தாண்டுக் காலம் வகித்த பொறுப்பை, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாட்டை உயர்த்தினார்.

நாடு கண்ட நேர்மையான பிரதமர்களின் அவரும் ஒருவர். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர். நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது வாழ்க்கையும் பணியும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்.

ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார், மேலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் ஏழைகளுக்கு ரூ. 1-க்கு அரிசி வழங்கப்பட்டது. இன்று மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மன்மோகன் சிங் தான். இவர் பிரதமராக இருந்த காலத்தில் ஏழைகளை மனதில் வைத்து பணியாற்றினார்.

அவர் ஒருபோதும் அதிகார போதையில் இருந்ததில்லை. அவர் ஒரு எளிய பண்புள்ள, நேர்மையான அரசியல்வாதி. மிகவும் மரியாதைக்குரிய மனிதர். அரசியலில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்தவர். அவரது மறைவு இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு.

மேன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.