முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு வைத்துளார்.
நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்ததற்கு பதிலளிக்குமாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஜே.பி.நட்டா, "முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் பிரதமரின் இறப்பில் கூட அரசியல் விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்கவில்லை. இப்போது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது.
இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை

தேயிலை பழங்குடியினரை வாக்கு வாங்கியாகப் பயன்படுத்தும் காங்கிரஸ்: நட்டா குற்றச்சாட்டு!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

