தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மன்மோகனுக்கு இரங்கல்: நாளை கூடுகிறது தெலங்கானா பேரவை

News image

கோப்புப்படம்

Updated On :28 டிசம்பர் 2024, 10:00 pm

Din

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, தெலங்கானா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதில் மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது; அன்று நாள்முழுக்க கூட்டம் நடைபெறும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.