பி.எஸ்.எல்.வி. சி -60: விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன - இஸ்ரோ

ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்ISRO
Published on
Updated on
1 min read

பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ஸ்பேஸ்டெக் -ஏ, ஸ்பேஸ்டெக் - பி ஆகிய இரு விண்கலன்கள் திட்டமிட்டபடி ராக்கெட்டில் இருந்து பிரிந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.

ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால், இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்திய ஆய்வு மையத்தை 2035 - க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், ராக்கெட்டில் இருந்த நான்கு அடுக்குகளும் சரியாக ராக்கெட்டில் இருந்து பிரிந்தன. மூன்று அடுக்குகள் பிரிந்த நிலையில், நான்காவது அடுக்கில் இருந்த இரு விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com