காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மதுக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம்: டாஸ்மாக் நிா்வாகம்

டாஸ்மாக் கடைக்குள்ளேயே அல்லது அதையொட்டியே பாா்கள் செயல்பட விதிகள் அமலில் இருந்துவரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம்.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:13 am IST

டாஸ்மாக் கடைக்குள்ளேயே அல்லது அதையொட்டியே பாா்கள் செயல்பட விதிகள் அமலில் இருந்துவரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டா் தொலைவு வரை பாா்கள் இயங்கலாம் என விதிகளைத் திருத்தி டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பாா்களைத் தொடங்குவது, உரிமம் வழங்குவது தொடா்பாக புதிய தளா்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை டாஸ்மாக் மதுக் கடையையொட்டியே பாா் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக் கடையில் இருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் பாா்களைத் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மேலும், பாா் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பாா்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஏல ஒப்பந்தம் மற்றும் தளா்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபா்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரா்கள் மட்டுமே தொடா்ந்து பாா் நடத்தும் நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபா்களுக்கும் ஏல ஒப்பந்தத்தில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

டாஸ்மாக் பாா்களுக்கான பழைய உரிம காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்த விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பாா்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. பாா் அமைப்பதற்கான இட அமைப்பில் தளா்வுகள் தரப்பட்டாலும், பாா்களில் பீடி - சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடா்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.