தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சந்திக்க உள்ளார்.
இந்தியா கூட்டணியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பிய பிறகு பிரதமருடன் நிதிஷ்குமாரின் முதல் சந்திப்பு இதுவாகும்.
மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிப்.12ல் பிகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரிவாக்கம் குடிறித்தும் நிதிஷ்குமாரும் மோடியும் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரையும் நிதிஷ்குமார் சந்திக்கிறார்.
நிதிஷ் குமார், மூத்த தலைவர் சஞ்சய் ஜாவுடன் புதன்கிழமை காலை 11 மணியளவில் தில்லி புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.