

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
ஆந்திர பிரதேசத்தின் முதல்வர், தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியைச் சந்தித்தார்.
90 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. அவர்கள் பேசியது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
ஜெகன் மோகன் ரெட்டி உடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வி.விஜயசாய் ரெட்டி மற்றும் ஆர்.கிருஷ்ணையா மற்றும் திருப்பதி எம்.பி. குருமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.